"நிபா வைரசை போராடி வென்றோம்- கொரோனா வைரசையும் வெல்வோம் " - கேரள சுகாதாரத்துறை

0 1045

நிபா வைரசை வெற்றிகரமாக முறியடித்தது போல் விரைவில் கொரோனா வைரசையும் நீக்கிவிடுவோம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

கேரளா மாநிலம் திருச்சூரில் சீனாவில் இருந்து திரும்பிய மாணவிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இதனால் அந்த மாணவி குணமடைந்தார். ஆனால் கேரளத்தில்  மேலும் ஒருவருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷைலஜா மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

இது போன்ற சவால்களை எதிர்கொள்வோம் என்று கூறிய ஷைலஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தை ஆட்டிப்படைத்த  நிபா வைரசை வென்றது போல் கொரனோ வைரசையும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments